தமிழ்நாடு

ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று…

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், நாங்குநேரி அதிமுக எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 5 மாதங்களுக்காக ரெட்டியார்பட்டி நாராயணன் நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலும் அவர் பங்கேற்று இருந்தார். இந்நிலையில் அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்னால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.மேலும் கடந்த ஒன்பது மாதங்களாக ஒட்டுமொத்த உலகையும் கொரோனா மிரட்டி கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு இதுநாள்வரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாததால், உலக அளவில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.