தமிழ்நாடு

காற்றில் பறக்கவிடப்படும் விதிமுறைகள்… காத்திருக்கிறதா பேராபத்து?

கொரோனா பேரிடர் 4-ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளில் சென்னை மாநகர பகுதிகளில் மாநகராட்சி பேருந்துகளில் தனிமனித இடைவெளி என்னும் விதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகருக்குள் பொது போக்குவரத்து அனுமதியால் கொரோனா தோற்று சமூக பரவலுக்கு வித்திடுகின்றதா? என்று அச்சம் எழுந்துள்ளது. கடந்த 6 மாதங்களாக 144 தடை உத்தரவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுப்போக்குவரத்து தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் மக்கள் ஏராளமானோர் அதிகமாக பேருந்துகளை பயன்படுத்தி தங்கள் பணிக்கு செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.அரசு அறிவித்துள்ள தளர்வுகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு பொது போக்குவரத்து செயல்படுவதாக கூறப்பட்டாலும் நடைமுறை சிக்கல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டல 7 அம்பத்தூர் பகுதியில் இருந்து சென்னை உட்பட புறநகர் பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 500 க்கும் மேற்பட்ட பேருந்துகள் மக்கள் தேவைக்கு ஏற்றவாறு இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சென்னை பட்டாபிராம் ஆவடி அம்பத்தூர் , அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளையும் தாண்டி ஈசிஆர் ஓஎம்ஆர் ஆகிய பகுதிகளுக்கு மக்கள் பணிகளுக்கு செல்கின்றனர். கடந்த இரண்டு நாட்களாக அரசு பேருந்துகள் செயல்பட்டு வந்த நிலையில் தனிமனித இடைவெளியுடன் பொதுப் போக்குவரத்தில் பல்வேறு விதிமுறைகளுடன் செயல்படுவதாக அரசு அறிவித்திருந்தாலும் நடைமுறை சிக்கல்கள் ஆக வழக்கத்திற்கு மாறாக எப்பொழுதும் போல் மக்கள் பயணிக்கும் இந்த காட்சி சமூக பரவலுக்கு வித்திடுகிறதா என்ற கேள்வியை தொடர்ச்சியாக எழுப்புகிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.