தகவல்கள்

விஜய் டிவி சீரியல்கள் ஒளிபரப்பு நேரம் மாற்றம்…

வரும் வாரம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதால் விஜய் டிவியில் சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.பிக்பாஸ் 4-வது சீசன் வரும் அக்டோபர் 4-ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், பாடகர் ஆஜித், கேப்ரில்லா, நடிகர் ஆரி உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களாக களமிறங்குவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.நிகழ்ச்சி தொடங்கும் அக்டோபர் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய நாள் போட்டியாளர்களின் அறிமுகம் ஆடல், பாடலுடன் களைகட்டும். அதைத்தொடர்ந்து மற்ற நாட்களில் திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் இரவு 9.30 மணிக்கு பிக்பாஸ் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடங்கிவிட்டதால் ஒரு சில சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘செந்தூரப்பூவே’ தொடர் இனி இரவு 7.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘தேன்மொழி பி.ஏ’தொடர் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் 21-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் இனி இரவு 8.00 – 8.30 மணி வரை ஒளிபரப்பாகும். ‘பாரதி கண்ணம்மா’ தொடர் 8.30-9.30 மணி வரை ஒளிபரப்பாகும். மேலும் ‘மௌனராகம் 2’, ‘ராஜா ராணி 2’ ஆகிய சீரியல்களும் விரைவில் வர இருக்கின்றன.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.