இந்தியா

பிரபல நடிகர் “சஞ்சய் தத்”துக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு..!

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு நேற்று முன்தினம் கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று அவரது உடல்நலம் சீராகி வீடு திரும்பினார். அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தகவல்கள் கூறின.

இதற்கிடையே, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “வணக்கம் நண்பர்களே… சில மருத்துவ சிகிச்சைக்காக நான் என் வேலையில் இருந்து ஒரு குறுகிய கால ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். எனது குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள். கவலைப்படவோ அல்லது தேவையின்றி யூகிக்கவோ வேண்டாம் என்று எனது நலம் விரும்பிகளைக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துகளுடன், நான் விரைவில் மீண்டும் வருவேன்” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்காம் கட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு இருப்பதால், அவர் சிகிச்சைக்காக உடனடியாக அமெரிக்கா செல்ல இருக்கிறார். கே.ஜி.எப் இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களில் சஞ்சய் தத் நடித்துவந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது புற்றுநோய் சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பதால் அவர் சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.