இந்தியாசினிமா

நடிகை “ரியா”வின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்.

சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளையெல்லாம் மும்பைக்கு மாற்றும்படி நடிகை ரியா கோரியிருந்தார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பீகாரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை, மும்பைக்கு மாற்ற இயலாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், ரியா மீதான குற்றச்சாட்டு கடுமையானது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, சுஷாந்த் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் பணபரிமாற்றம் செய்யப்பட்டதாக தொடர்பான புகாரில், நடிகை ரியா மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகினார். தந்தை இந்திரஜித், சகோதரர் சோவிக், சுஷாந்துடன் ஒரே வீட்டில் வசித்த அவரது நண்பர் சித்தார்த் பிதானியும் விசாரணைக்கு ஆஜரானார். தொடர்ந்து, இன்றைய தினம், மும்பையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரக அலுவலகத்தல், நடிகர் சுஷாந்த் சிங்கின் சகோதரி மித்து சிங் ஆஜராகினார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.