தகவல்கள்

48 பேருக்கு ஆளுநர் மாளிகையில் கொரோனா: தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனை!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் 48 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தெலங்கானாவில் இதுவரை கொரோனாவால் 34,671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 22,482 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 356 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 11,833 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சோதனையில் பாதுகாப்பு பணியிலிருந்த 28 பேர், ஆளுநர் அலுவலகத்தைச் சேர்ந்த 10 பேர் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உள்ளிட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் உடனடியாக மருந்த்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ராஜ் பவனில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் அவருக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியது.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நான் கொரோனா சோதனை மேற்கொண்டேன். பாதிப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. சிவப்பு மண்டலப் பகுதியில் உள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் விரைவாக சோதனை செய்யுங்கள். விரைவாக சோதனைன் செய்வதன் மூலம் நம்மை மட்டுமல்லாமல் பிறரையும் பாதுகாக்கும். தயக்கம் வேண்டாம், சோதனை செய்து மற்றவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.