அம்மாடியோவ்..!! ஒரே காலாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி லாபம்..! அதிர்ச்சியில் அம்பானியின் ரிலையன்ஸ்
டெல்லி: ஒரே காலாண்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய குழுமமான ரிலையன்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டிற்கான 3-வது காலாண்டு முடிவுகளை பிரபல ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு: நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 10,251 கோடியாகவும், இதன் ஆண்டுக்காண்டு வளர்ச்சி விகிதமானது 8.82%-ஆக உயர்ந்திருக்கிறது. இந்த நிகர லாபமானது முந்தைய காலாண்டில் ரூ. 9,420 கோடி ரூபாயாக இருந்தது. அது தற்போது, நிறுவனத்தின் மொத்த வருவாய் 56.38% உயர்ந்து ரூ. 1,60,299 கோடியாக உச்சம் பெற்றிருக்கிறது.
மேலும், கடந்தாண்டு மார்ச் மாதம் முடிவில் ரூ. 2,18,763 கோடியாக இருந்த கொடுக்கப்பட வேண்டிய கடன் தொகையானது கடந்த டிசம்பரில் ரூ. 2,74,381 கோடியாக உயர்ந்திருக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. நிறுவனங்களின் வரலாற்றில் இது அசுர வளர்ச்சி என்று கூறப்படுகிறது. இந்த அசுர வளர்ச்சி குறித்து ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி கூறியதாவது:இன்றைய தலைமுறை நுகர்வோர்களுக்கு ஏற்றார்போல் தங்களது பொருட்களின் விற்பனை நடந்து வருகிறது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இந்தக் காலாண்டில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் 10 ஆயிரத்து 251 கோடி ரூபாய் உள்ளது. இதன்மூலம் ஒரே காலாண்டில் 10 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்நிறுவன லாபம் 9 ஆயிரத்து 420 கோடி ரூபாயாக இருந்தது. தனது பெட்ரோ கெமிக்கல் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் லாபங்கள் கணிசமான அளவு உயர்ந்ததையடுத்து இந்த சாதனையை ரிலையன்ஸ் நிறுவனம் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.