இந்தியாதகவல்கள்

பஞ்சாபில் காரை நிறுத்த முயன்ற காவலருக்கு நிகழ்ந்த பரிதாபம்…!

ஜலந்தர்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர், அவ்வழியாக வந்த காரை நிறுத்த முயன்ற போது, கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல், காவலரையும் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரை குறுக்காக மறிப்பது போல காவலர் நின்றிருந்த நேரத்தில், கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல், காரின் முன்பக்கத்தில் காவலர் இடிக்க, காரின் மீது விழுந்த காவலருடன் சில அடி தூரங்கள் காரை ஓட்டிச் சென்றார்.

காவலருடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், கார் பின்னாடியே துரத்திச் சென்று காரை நிறுத்தி, காவலரை மீட்டனர்.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலரை, காரைக் கொண்டு இடித்து, இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.