சென்னைதமிழ்

சென்னையில் ஐபிஎஸ் ஆதிகாரிகல் இரக்கம்.. தமிழக அரசு அதிரடி..!!

சென்னை மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மண்டலம் வாரியாகவும் கொரோனா தடுப்பு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்திலேயே கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை மையப்புள்ளியாக மாறியுள்ளது.

அதன்படி சென்னை மேற்கு மண்டலத்திற்கு அபய்குமார் சிங் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தெற்கு மண்டலம் அதிகாரியாக அம்ரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மண்டலத்துக்கு ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் மற்றும் கிழக்கு மண்டலத்துக்கு ஆபாஷ் குமார் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோல சென்னை புறநகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பவானீஸ்வரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மண்டல வாரியாக கொரோனா தடுப்பு பணிகளை ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஒருங்கிணைந்து செயல்படுவார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.