இந்தியா

மரத்தையே வகுப்பு அறையாக மாற்றிய ஆசிரியர் ,மாணவர்களுக்காக மரத்தில் இருந்தபடி பாடம் எடுக்கும் ஆசிரியர்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் கோடிக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல், பாடம் படிக்க முடியாமல் சிக்கலில் உள்ளனர். இந்த நிலையில் பல கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்குவங்கத்தை சேர்ந்த சுப்ராட்டா என்ற ஆசிரியர் கடந்த சில நாட்களாக தனது மொபைல் போன் மூலம் வீடியோ கான்ப்ரன்ஸில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார். இந்நிலையில் திடீரென அவரது வீட்டில் இண்டர்நெட் சிக்னல் கிடைக்காததால் அவரால் பாடம் நடத்த முடியவில்லை. வீட்டின் ஒவ்வொரு பகுதியாக சென்று சிக்னல் கிடைக்க அவர் முயற்சி செய்தார். ஆனால் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

சிக்னல் தேடி தன் கிராமத்தில் பல் வேறு இடங்களுக்கு கையில் போனுடன் சென்று பார்த்தார் ஆசிரியர்.ஒரு  அதிரடி முடிவெடுத்தார்,  அருகில் இருந்த மரம் ஒன்றில் ஏறி சிக்னல் கிடைக்கின்றதா? என்று பார்த்தபோது சிக்னல் கிடைத்தது. உடனே மரத்தில் உட்கார்வதற்காக இடம் தயார் செய்து காலை முதல் மாலை வரை அதாவது காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை மரத்தில் உட்கார்ந்தே பாடம் நடத்தியதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களுடன் கூடிய செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போன்று , நல்ல ஆசிரியருக்கு மரம் கூட வகுப்பு அறை தான் என மரத்தையே என் வகுப்பறையாக மாற்றிவிட்டார் இந்த ஆசிரியர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.