சினிமா

நடிகர் ஜெயபிரகாஷ் மாரடைப்பால் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள அவரது வீட்டில் காலை படுக்கையில் இருந்து எழுந்து குளியல் அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் ஜெயபிரகாஷ் குளியலறையிலிருந்து வெளியே வராத நிலையில் குடும்ப உறுப்பினர்கள் குளியலறை கதவை உடைத்து சென்று பார்த்தபோது, அவர் குளியல் அறையிலேயே மாரடைப்பால் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

ஜெய பிரகாஷ் ரெட்டி காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த நிலையில் நாடகம் மற்றும் நடிப்பு ஆகியவற்றின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக நாடகங்களில் முதலில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சினிமா துறையில் கால்பதித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கி வில்லனாகவும் காமெடி நடிகராகவும் ரசிகர்களின் மனதை கவர்ந்து வந்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சினிமா படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்த நிலையில் குண்டூரில் உள்ள தனது வீட்டில்  திடீரென உயிரிழந்திருப்பது தெலுங்கு திரைப்படத் துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.