கதைகள்தமிழ்நாடு

ஏழு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை..! நீதி கிடைக்கும் வரை துணை நிற்போம் – குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அறிக்கை..

பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமைகள் ‘போக்சோ’ சட்டம் போட்டும் குறையாத நிலையில் தற்போது தமிழகத்தில் 7 வயது சிறுமியை 29 வயது கொடூரன் பாலியல் பலாத்காரம் செய்து அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் என்ற கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி தனது வீட்டின் முன்னே விளையாடி கொண்டிருந்தார். திடீரென அவர் மாயமானதால் அவரது பெற்றோர்கள் சிறுமியை தேடி வந்தனர். இரவு வரை கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் சிறுமியை தேடி வந்த நிலையில் கருவேல மரங்கள் நிறைந்த கண்மாயில் சிறுமி சடலம் பொதிந்து கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தான் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 29 வயதான ராஜேஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெண் குழந்தையை நாம் வணக்கும் மகாலஷ்மி போல் செல்வா மகளாக வளர்த்து வரும் இக்கால கட்டத்தில் தொடர்ந்து இதுபோன்ற கொடும் சம்பவம் நம் சமூகத்திற்கு தலை குனிவை ஏற்படுத்துகிறது. இதனை நாம் எளிதில் கடந்து செல்ல இயலாத ஓன்று, இதனை முற்றிலும் ஒடுக்க வேண்டும். இதுபோன்ற அரக்கர்கள் சமூகத்தில் எந்த உயர்நிலையில் இருந்தாலும் போக்ஸோ சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தந்து, பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு உரிய நீதியும், உதவியும் கிடைத்திட என்றும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் துணை நிற்கும்.  இதுபோன்ற கொடூரர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை, யாரிடம் பழகுகிறார்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை கவனித்து கொள்ள வேண்டும்.

மேலும், இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு நீதி வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் #JusticeforJayapriya ன்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.