சினிமா

தன் இரண்டாவது திருமணத்தை பற்றி பேசிய அமலா பால்..

2010 இல் ‘மைனா’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால்பதித்த பிறகு, நடிகை அமலா பால் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தைரியமான மற்றும் சவாலான பாத்திரங்களை ஏற்றுக் கொள்ளும் நற்பெயரையும் அவர் சமீபத்தில் நடித்த  ‘ஆடை’ படத்தின் மூலம் அவருக்கு கிடைத்து உள்ளது. ‘அதோ அந்தா பரவாய் போலா’, ‘கடவர்’, மற்றும் மகேஷ் பட் இயக்கிய பர்வீன் பாபி லைப் உள்ளிட்ட மூன்று பெண் மையப் படங்களிலும் நடித்து உள்ளார்.

இயக்குனர் ஏ.எல். விஜயிடமிருந்து விவாகரத்து பெற்ற பின்னர் , ‘ஆடை’ பட வெளியீட்டின் போது அவர் தன் புதிய காதலை  கண்டுபிடித்து விட்டதாக  தாமாக முன் வந்து கூறினார். மேலும் அவர் ஒரு நடிகையாக தனது வாழ்க்கையில் முன்னேறத் தூண்டுகிறார்என்றும் ஆடை படத்தில் நடிக்க தன்னை ஊக்க வைத்ததாகவும் கூறினார்.இந்த சமயத்தில்  சில வாரங்களுக்கு முன்பு அமலா பால் மற்றும் பாலிவுட் பாடகர் பவ்னிந்தர் சிங்  பஞ்சாபி பாணியில்  திருமண செய்ததை போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்தன, ஆனால் அதை பற்றி இந்த ஜோடி எந்த  கருத்துக்களும் தெரிவிக்கவில்லை.

அண்மையில் டோலிவுட் அறிக்கை ஒன்றில்  அமலா பால் தனது இரண்டாவது திருமணம் குறித்து ஒரு நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார். “என் திருமணத்திற்கு இன்னும் சில காலம் உள்ளது. நான் தற்போது படங்களில் பிஸியாக இருக்கிறேன். அவை முடிந்ததும், எனது திருமணத்தைப் பற்றி அறிவிப்பேன். என் காதலைப் பற்றி பேசினேன். அதுபோல எனது திருமணத்தைப் பற்றியும் நானே பேசுவேன்.அதுவரையில், எனது திருமணங்களில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம். நேரம் வரும்போது அதை நான் அறிவிப்பேன். “என தெரிவித்தார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாவின் சமீபத்திய பதிவில் “நமக்கு நாம் தாம் ஒரு நல்ல இரட்டைச் சுடர், பாதுகாவலர், ஆத்ம துணையை, அன்பே, நம்பிக்கையின் புனித ஆவி, சுதந்திர மந்திரம், நபி , புத்தர், ஆவி வழிகாட்டி, தெய்வீக எதிர், ஹீரோ என்பதை உணர்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்ற ஒரு மேற்கோளை குறிப்பிட்டு உள்ளார்.

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.