உலகம்தகவல்கள்

ஏசி கார் வைத்திருப்பவரா நீங்கள்? இது உங்கள் கவனத்திற்கு!

கார்ரை விரைவில் குளிர வைக்க

  • காரில் காற்றோட்டம் இருக்குமாறு செய்வது உங்கள் காரை திறம்பட குளிர்விக்கும். வேகமாக கார் குளிர்ச்சி அடைய  வேண்டுமென்றால், சூடான காற்றை வெளியேற்ற வேண்டும்.. இது மிகவும் எளிது. காரில் உள்ள ஜன்னல்களை திறந்து காற்றை வெளியேற்றவும்.
  • ஆரம்பத்தில் குறைந்தபட்ச வேகத்தில் ஏ.சி.யை இயக்குவது சிறந்த குளிரூட்டலைப் பெற உதவும். நீங்கள் காரில் ஏறும் போது வாகனத்தின் வெப்பநிலை வெளிப்புற வெப்பநிலையை விட அதிகமாக இருக்கும் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும். எனவே நினைவில் கொள்ளுங்கள், குறைந்தபட்ச வேகத்தில் தொடங்கவும். இப்போதெல்லாம் கார்களில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி ஏர் கண்டிஷனிங் அமைப்புகள் குறைந்த வேகத்தில் மட்டுமே தொடங்குகின்றன. எனவே உங்களிடம் மனுவால்  ஏர் கண்டிஷனருடன் கார் இருந்தால், தானியங்கி ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் போலவே அதைக் கட்டுப்படுத்தவும்.

தொலை தூர பயணம் செய்பவர்களுக்கு

  • வாகன குளிரூட்டி AC யுடன் தொடர்புடைய கீழ்க்காட்டப்பட்ட ஒரு பட்டன் காணப்படும். இது ஆன் செய்துள்ள போது வாகனத்தின் உள்ளே உள்ள காற்றை எடுத்து குளிரூட்டும்.
  • இதை ஆஃப் செய்துள்ள போது வெளியில் இருந்து காற்றை எடுத்து குளிரூட்டும்.

  • நாம் வாகனம் செலுத்தும் போது வெளியில் இருந்து காற்றை எடுப்பதால் குளிரூட்டுவது சற்று குறைவாக இருப்பதாலும் வெளியில் இருந்து வேறுவித வாசனைகள் உள்ளே வருவதாலும் அநேகமாக எல்லோரும் காருக்குள்ளேயே இருக்கும் காற்றை குளிரூட்டும்(Internal cooling) பட்டனை ஆன் நிலையிலேயே வைத்திருப்போம்.
  • ஆனால் நீண்டதூரம் பயணம் செய்யும் போதோ அல்லது நிறைய நபர்கள் பயணம் செய்யும் போதோ உள்ளே உள்ள காற்றை எடுத்து குளிரூட்டும் சந்தர்ப்பத்தில் உள்ளே ஆக்ஸிஜன் அளவு குறைந்து நம் சுவாசம் காரணமாக கார்பன்டை ஆக்ஸைடு அதிகரித்து காணப்படும்.
  • இந்த வேளையில் வாகனம் செலுத்துபவருக்கு அதிக கொட்டாவி நித்திரை மயக்கம் உடல் சோர்வு என்பன ஏற்படும்.
  • இந்த வேளையிலேயே நாம் வாகனத்தை விட்டு வெளியில் வந்து கால் கையை அசைப்பதாலோ அல்லது முகம் கழுவுவதாலோ அல்லது ஒரு கடைக்கு சென்று ஒரு தேநீர் அருந்துவதாலோ பழைய நிலைக்கு வருவது போல உணர்வோம்.
  • அது உண்மையில் வெளியில் வந்து நல்ல ஆக்ஸிஜனை சுவாசிப்பதால் உடல் பழைய நிலைக்கு திரும்புகிறது.
  • நீங்கள் வாகனத்தில்  செலுத்தும் போது அதிக கொட்டாவி, சோர்வு, நித்திரை மயக்கம் வந்தால் அடிக்கடி கீழுள்ள பட்டனை ஆஃப் நிலைக்கு கொண்டு வந்து, வெளியில் உள்ள காற்று உள்ளே வர வாய்ப்பளித்தால் வெளியில் உள்ள காற்றில் இருந்து ஆக்ஸிஜன் உள்ளே வருவதால் கொட்டாவி குறைவதை உணர்வீர்கள்.

  • தொலை தூர பயணம் செய்பவர்கள் நகர்ப்புற பகுதிகளில் இடையிடையே (ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை ) கீழுள்ள பட்டனை ஒரு பதினைந்து நிமிடங்கள் ஆஃப் செய்து வெளியில் உள்ள காற்றை உள்ளே எடுத்து குளிரூட்டுவதால் நித்திரை மயக்கம் வருவதை ஓரளவு தடுக்கலாம் நாமும் உடல் சோர்வு இன்றியும் பயணிக்கலாம்.

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.