சினிமா

“சூர்யா – ஜோதிகா” மீண்டும் திரையில் ஜோடியாக…

திரையில் ஜோடியாக நடித்து அதற்குப் பிறகு காதலித்து நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக சேர்ந்தவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் ஷூட்டிங்கில் தான் அவர்கள் முதன் முதலாக சந்தித்தனர். நண்பர்களாக பழகி அதற்கு பிறகு அது காதலாகி, செப்டம்பர் 11, 2006ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போதும் ரசிகர்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
திருமணத்திற்கு முன்பு ஆறு படங்களில் ஜோடியாக அவர்கள் நடித்துள்ளனர். அந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சூர்யா-ஜோதிகா இடையே திரையில் இருக்கும் கெமிஸ்ட்ரி போலவே நிஜவாழ்க்கையில் அவர்களுக்கு நடுவில் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது. அதை அவர்கள் பொது நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக வரும்போது நாம பார்த்திருப்போம்.

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா அதற்கு பிறகு 2015ல் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக ஜோதிகா நடிப்பில் பொன்மகள் வந்தாள் படம் தான் இந்த வருடம் வெளிவந்தது. அந்த படம் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி இணையதளத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் ஜோதிகா நடிக்கும் படங்கள் அனைத்தையும் சூர்யா தான் தயாரித்து வெளியிட்டு வருகிறார்.சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தனித்தனியாக படங்கள் நடித்து வந்தாலும். அவர்கள் மீண்டும் ஜோடியாக திரையில் பார்க்க அதிக அளவு ரசிகர்களும் விரும்புகிறார்கள். அவர்கள் ஆசை நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கும் சூழ்நிலையில், பிரபல இயக்குனர் ஹலிதா ஷமீம் தான் அவர்கள் இருவரையும் ஜோடியாக நடிக்க வைக்க ஒரு கதையை தயார் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். சென்ற வருடம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற சில்லுக்கருப்பட்டி என்ற படத்தை இயக்கி இருந்தவர் தான் ஹலிதா ஷமீம். நல்ல வரவேற்பு கிடைத்த இந்த படத்தினை சூர்யா தயாரித்திருந்தார். நான்கு கதைகளை இணைத்து ஒரு படமாக வெளியாகி இருந்தது சில்லு கருப்பட்டி படம் பெரிய அளவில் இயக்குனருக்கு பாராட்டுகளை பெற்றுத் தந்தது.

சூர்யா-ஜோதிகாவுக்கு கதை தயார் செய்ய போவதாக கூறியுள்ள ஹலிதா சமீம் “I will definitely pitch a script to them” என ட்விட் செய்துள்ளார். ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தான் அவர் இப்படி கூறி உள்ளார். சூர்யா தற்போது சூரரைப்போற்று படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். சுதா கொங்கரா இயக்கியுள்ள அந்த படம் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் சென்சார் பணிகளும் முடிக்கப்பட்டு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கின்றனர். அதனால் மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு சூரரைப் போற்று ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரித்திருந்த பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக ஓடிடி இணையதளத்தில் வெளியாகி இருந்த நிலையில் சூர்யாவின் சூரரைப் போற்று படமும் வெளியாகும் என வதந்திகளும் பரவிய நிலையில், சூர்யா அது பற்றி விளக்கம் அளித்திருந்தார். சூரரைப் போற்று நிச்சயம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.அடுத்து சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா என்ற படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்த இரண்டு படங்களில் எது முதலில் துவங்கும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அருவா படம் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஷுட்டிங் துவங்கும் முன்பே கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அருவா படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் அது உருவாகிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.