உலகம்

ஒரேநாளில் உலக வைரலான சிறுவன் – நாயுடன் பயங்கர சண்டை!!

”தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?” என்ற பாரதியின் வரிகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். வீரத்தில் என்ன வயது வித்தியாசம் என்பதை உணர்த்தும் இந்த வரிகளுக்கு உதாரணமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் வியோமிங் பகுதியில் உள்ள சயன் நகரில் பிரிட்ஜர் வாக்கர் என்ற 6 வயது சிறுவனும், அவனது தங்கையும் வசித்து வருகின்றனர். கடந்த 9ஆம் தேதி அன்று அந்த சிறுமியை ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய் ஒன்று கடிக்க வந்துள்ளது. இதைக் கண்டு ஓடிய பிரிட்ஜர் தங்கையை காப்பாற்ற போராடியுள்ளார்.

நாயுடன் கடுமையாக சண்டையிட்டுள்ளார். இதில் நாய் கடித்ததில் சிறுவனின் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் தங்கையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கடைசி வரை போராடியுள்ளார். இறுதியாக தனது தங்கையை எந்தவித காயங்களும் இன்றி காப்பாற்றியுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு முகத்தில் 90 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதுபற்றி சிறுவனின் அத்தை நிக்கி வாக்கர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.அதில், ”எனது சகோதரர் மகன் ஒரு ஹீரோ. அவனது சாகச செயலை அனைவரும் பகிருங்கள். இதன்மூலம் அவனுக்கு பிடித்தமான ஹீரோக்களிடம் இருந்து வாழ்த்துகள் கிடைக்கும். தனது தங்கைக்காக நாயுடன் போராடி ஆச்சரியப்படுத்தியுள்ளான். இதுபற்றி அவன் கூறுகையில், நாயுடன் சண்டையிட்ட போது யாராவது இறந்திருக்க வேண்டுமென்றால் அது நானாகத் தான் இருக்கும் என நினைத்ததாக கூறினான். தனது தங்கையின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவளை பாதுகாக்க வேண்டும் என்று ஓடியுள்ளான்.

தான் நினைத்ததைப் போல தங்கையை காப்பாற்றி விட்டான்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு உலகளவில் வைரலாகி வருகிறது. லட்சக்கணக்கில் லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள் கிடைத்துள்ளன. பலரால் பகிரப்பட்டு ஒரேநாளில் உலக ஃபேமஸ் ஆகிவிட்டான். ஹாலிவுட்டைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் சிறுவனை பாராட்டியுள்ளனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.