இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜோகோ விடோடோ ஒரு அரசாங்க செய்திக்குறிப்பில், COVID-19 வைரஸ் பரவல் தொடங்கிய நாள் முதல் ,தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு வகை மஞ்சள் வகையான சிவப்பு இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள் மற்றும் குர்குமா ஆகியவற்றின் கலவையை மூன்று முறை குடிக்க எடுத்துக்கொண்டதாகக் கூறினார்.
மேலும் , இந்தியாவில், ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவிற்கான மஞ்சள் விற்பனை கடந்த வாரங்களில் அதிகரித்துள்ளது. கே பீ பீ எக்ஸ்போர்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி கவ்சல் காகர் கூறுகையில், கடந்த சில வாரங்களாக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் தேவை அதிகரித்துள்ளதால் மஞ்சள் ஏற்றுமதி 300 சதவீதம் உயர்ந்துள்ளது என்று ஒரு எகனாமிக் டைம்ஸ் (எக்கோனிமிக் Times) அறிக்கை கூறுகிறது.
மும்பையைச் சேர்ந்த மற்றொரு ஏற்றுமதியாளர், COVID-19 காரணமாக, பிப்ரவரி இறுதியில் ஒரு நாளைக்கு 300 கிலோ ஏற்றுமதி செய்வதிலிருந்து, இப்போது ஒரு நாளைக்கு 3-4 டன்னாக தேவை அதிகரித்து உள்ளது.
2019 ஆம் ஆண்டின் உலகளாவிய மஞ்சள் சந்தை அறிக்கை, சுகாதார உணர்வை மாற்றுவதன் காரணமாக ஐரோப்பிய சந்தையில் மஞ்சள் தேவை அதிகரிப்புக்கு வலுவான காரணி என்று கூறுகிறது. “ஐரோப்பிய நுகர்வோர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் உடல் பருமன் பிரச்சினைகள் உள்ள மக்கள் தொகை அதிகமாக உள்ளதாலும் அதிகரித்து வரும் வயதான மக்கள்தொகையும் மஞ்சள் ஏற்றுமதியை ஏற்கனவே அதிகரித்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக மஞ்சள் ஏற்றுமதி பலமடங்கு அதிகரித்து உள்ளது.
தமிழர்களின் சமையலறையின் அரசியாக இருந்த மஞ்சள் இப்போது உலகம் முழுவதும் வேரூன்றி இருக்கிறார்.