இளம்பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ் எஸ்.ஐ பணி நீக்கம்..!
ஆந்திர மாநிலம் ஸ்ரீகுளம் அருகே உள்ள துங்கபேட்டா கிராமத்தில் அப்பாராவ் என்பவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்பாராவின் மகளை நோட்டமிட்ட உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணா தந்தை, மகள் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அந்த பெண்ணின் செல்போன் எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டு இருவரையும் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அந்த இளம் பெண்ணை செல்போனில் தொடர்புகொண்ட ராமகிருஷ்ணா, வழக்கு பதிவு செய்யாமல் இருக்க தனது வீட்டிற்கு தனியாக வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் ராமகிருஷ்ணாவுடனான செல்போன் உரையாடல்களை பதிவுசெய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.