தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் மாநிலங்களிடையே பேருந்து சேவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 650 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்ட பணிகள் மற்றும் முடிவடைந்த பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர், வேளாண் துறை, ஊரடக வளர்ச்சித்துறை உள்ளிட்ட 16 துறைகளில் சுமார் 360 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, கொரோனா பாதிப்பு குறைந்த உடன் மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தொடங்கும் என தெரிவித்தார்.

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.