தமிழ்நாடு

உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் மனு இன்று விசாரணை

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018-ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கல்லூரி மாணவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இதனை தொடந்து, அதே ஆண்டு மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரியும் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 18-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி இல்லை என தீர்ப்பு வழங்கி மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யது. அதில், ஆலை மூடப்பட்டுள்ளதால் பராமரிப்பிற்காக இடைக்கால அனுமதி வழங்க வேண்டும், ஆலை மூடலுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வேந்தாந்தா நிறுவனம் முன்வைத்துள்ளது. இந்த மனுவானது நீதிபதிகள் ரோஹிங்டன் நாரிமன், இந்திரா பானர்ஜி, நவீன் சின்ஹா அமர்வு முன் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.