தமிழ்நாடு

வீடு தேடுவோரைக் குறிவைத்து மோசடி செய்த கும்பல் கைது…

வாடகை வீடு தேடுவோர்களை குறிவைக்கும் மோசடி கும்பல் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களை கொண்டு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். புகார்தாரர்கள்  கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் மோசடி கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். போலீசாரின் விசாரணையில் கிழக்கு தாம்பரம், அந்தோணி தெருவில் செயல்பட்டு வந்த சன் சைன் ப்ராப்பர்ட்டி டெவலப்பர்(Sun shine Property Developer) என்ற நிறுவனம்தான் வீடு வாடகைக்கு தேடி வரும் நபர்களை குறிவைத்து பல கோடி ரூபாய்களை ஏமாற்றியது தெரியவந்தது.

தாம்பரம், சேலையூர், பம்மல், குரோம்பேட்டை, மடிப்பாக்கம், மேடவாக்கம், நன்மங்கலம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் வாடகைக்கு தயார் நிலையில் உள்ள வீடுகளை இவர்கள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு பின்னர் அந்த வீட்டை லீஸ் அடிப்படையிலும் மாத வாடகை அடிப்படையிலும் வாடகைக்கு விடுவதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஓ.எல்.எக்ஸ், 99acres.com, nobrokers.com போன்ற செயலிகளிலும் விளம்பரம் கொடுத்துள்ளனர். ரூ.5 லட்சத்தில் இருந்து 15 லட்சம் வரையிலும் லீஸூக்கு விட்டும், மாத வாடகையாக ரூபாய் 10,000 முதல் ரூபாய் 20,000 வரை வசூலித்து வந்ததும் தெரியவந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த நிறுவனம் இதுபோன்று ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது

இந்த நிறுவனம் கடந்த 2019 டிசம்பர் மாதம் வரை வீட்டின் உரிமையாளர்களுக்கு வாடகையை சரியாக கொடுத்து வந்துள்ளனர். அதன் பின்பு 2020 ஜனவரி மாதம், முதல் இவர்கள் வாடகை பணத்தை தராததால் வீட்டின் உரிமையாளர்கள் தற்போது அந்த வீட்டில் குடியிருக்கும் நபர்களிடம் வந்து விசாரித்துள்ளனர். அப்படி விசாரிக்கையில்தான் இந்த நிறுவனம் உண்மையான வீட்டு உரிமையாளர்களையும் தற்போது வீட்டில் குடியிருந்து வரும் வாடகைதாரர்களையும் ஏமாற்றி உள்ளனர் என்பது தெரியவந்தது.

மேலும், மோசடி செய்த பணத்தை வைத்து சினிமா மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து பணம் சம்பாதித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக பிரகாஷ் என்பவர் இணை தயாரிப்பாளராக வெள்ளைப்புறா, மஞ்ச குருவி என்ற திரைப்படங்கள் தயாரித்ததும் அதில் 40 லட்ச ரூபாய் அளவில் முதலீடு செய்து பிரபல நடிகை, நடிகர்களை நடிக்க வைத்தது தெரியவந்துள்ளது. சன் ஷைன் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி பிரகாஷ், காயத்ரி மற்றும் அவரின் கணவரான விக்னேஷ் ஆகியோர் சென்னையில் லீஸ், வாடகைக்கு வீடு தேடுவோர் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் என பல நபர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் ஏமாற்றி இருப்பது வாடகைக்கு வீடு தேடுவோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.