சென்னை

வேறு ஒருவர் பெயரில் ரூ.10 லட்சம் திருட்டு…

சென்னையில் மருத்துவமனை ஊழியரின் கிரெடிட் கார்டை பிளாக் செய்து, அவர் பெயரிலேயே புதிய கிரெடிட் கார்டு வாங்கி பயன்படுத்தி ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட என்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரெடிட் கார்டு அப்ளை செய்து, வாடிக்கையாளர்போல் வங்கியிலும், வங்கியில் இருந்து பேசுவதுபோல் வாடிக்கையாளரிடமும் பேசி மோசடியை அரங்கேற்றியுள்ளார் ஒரு இளைஞர். இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு ஹெல்மெட் பெரிதும் உதவியுள்ளது. சென்னை அடுத்த முகலிவாக்கத்தை சேர்ந்தவர் 55 வயதான இருதயராஜ். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் இவருக்கு விபத்து ஏற்பட்டதால் கால் முறிவு ஏற்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு இருதயராஜுக்கு வங்கியில் இருந்து பேசுவதாகவும், பழைய கிரெடிட் கார்டை பிளாக் செய்து விட்டு, அப்டேட் ஆன புதிய கார்டு கொடுப்பதாக கூறி உள்ளனர். கார்டு பற்றிய விபரங்களை கேட்க அவரும் தெரிவித்துள்ளார்.
திடீரென அவரது கிரெடிட் கார்டில் இருந்து ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 5 லட்சம் ரூபாய், 5 லட்சம் ரூபாய், 30 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துள்ளதாக இருதயராஜ் செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. தன்னிடம் கிரெடிட் கார்டு உள்ள நிலையில், ஏதோ தவறாக குறுந்தகவல் வருவதாக நினைத்து, கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார்.
பின்னர் வங்கியில் இருந்து பேசிய ஊழியர், புதிய கிரெடிட் கார்டில் ஒரே நேரத்தில் 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்தது நீங்கள்தானா எனக் கேட்டுள்ளனர். இல்லை என்றும், தனக்கு புதிதாக கிரெடிட் கார்டு எதுவும் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார். வங்கி ஊழியரின் அறிவுறுத்தலின் பேரில், சைபர் கிரைம் போலீசாரிடமும், மாங்காடு போலீசிலும் இருதயராஜ் புகார் அளித்தார்.அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்தியன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணையில், இருதயராஜ்க்கு தெரியாமலேயே அவரது பெயரில் இருந்த கிரெடிட் கார்டை பிளாக் செய்து விட்டு புதிதாக கிரெடிட் கார்டை வாங்கி இருப்பது தெரியவந்தது. இருதயராஜ் செல்போனுக்கு வந்த அழைப்புகளின் எண்களை வைத்து விசாரணை செய்தனர். தொடர் விசாரணையில் கோயம்பேட்டை சேர்ந்த 28 வயதான மென் பொறியாளர் கார்த்திகேயன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், கிரெடிட் கார்டு மோசடி குறித்து திடுக்கிடும் தகவல் வெளியானது. கார்த்திகேயன் தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு சம்பந்தமாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பேசும் கஸ்டமர் கேர் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். கிரெடிட் கார்டில் அதிக தொகை வைத்திருக்கும் நபர் யார் என்பது குறித்த தகவல் அவருக்கு முழுமையாக தெரிந்துள்ளது. கிரெடிட் கார்டு சம்பந்தமான மோசடிகள் அதிக அளவில் நடைபெற்றாலும் குற்றவாளிகள் அதில் அதிக அளவில் சிக்குவதில்லை என்பதால் அதில் மோசடி செய்ய முடிவு செய்தார். மேலும் இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு ஹெல்மெட் பெரிதும் உதவியுள்ளது. கொரியர் அலுவலகம் மற்றும் கொரியர் வாங்க வரும் போதும் வங்கிக்கு செல்லும் போதும் ஹெல்மெட்டுடனே சென்றுள்ளார். அந்த ஹெல்மெட்டும், இருசக்கர வாகனத்தின் எண்ணையும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் கண்டுபிடித்து போலீசார் கைது செய்துள்ளனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.