இந்தியா

“தேர்வுகளை நடத்த வேண்டும்” – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

கொரோனா பரவலால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இறுதி பருவத் தேர்வை தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கல்லூரி இறுதித் தேர்வை நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து டில்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு அளித்தனர். அதில், கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளை மாநில அரசுகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டது. தேர்வுகளை தள்ளிவைத்தாலும் சரி, தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்வு நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்கக் கூடாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.