தமிழ்நாடு

குழந்தையை “நரபலி” கொடுக்க முயற்சி – நெல்லை அருகே பயங்கரம்

நெல்லை களக்காடு அருகே உள்ள சடையமான்குளத்தைச் சேர்ந்த பார்வதி என்பவரது வீட்டில், தங்கப்புதையல் இருப்பதாகவும், அதனை எடுக்க பூனையை நரபலி கொடுக்க வேண்டும் எனவும் சாமியார் கிரான ராஜன் என்பவர் தெரிவித்துள்ளார். புதையலுக்கு ஆசைப்பட்ட பார்வதியும், அவரது மகன் குமரேசனும் நரபலிக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், பூஜை நேரத்தின் போது பூனை தப்பித்து ஓடியது.

இதனால் குமரேசனின் மூத்த மகன் அல்லது இளைய மகனை நரபலி கொடுக்க வேண்டும் என சாமியார் கிரான ராஜன் கூறியுள்ளார். அப்போது குடி போதையில் இருந்த குமரேசன் இதற்கு சம்மதித்துள்ளார்.பாட்டி பார்வதியும் குழந்தையை நரபலி கொடுக்கலாம் என ஈவு இரக்கமற்ற முடிவை எடுத்துள்ளார். இதனை அறிந்த குமரேசனின் மனைவி, இருவருடனும் சண்டைப் போட்டுவிட்டு, வீட்டை விட்டு குழந்தையுடன் ஓடிவந்து, அக்கம்பக்கத்தினரிடம் நடந்ததை கூறி கதறியுள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.