சினிமாதகவல்கள்

அஜித்தின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் அஜித்தின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் ஒருவர் நேற்று முன்தினம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்தார். இதையடுத்து போலீசார் வெடிகுண்டு  நிபுணர்களுடன் அஜித் வீட்டிற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். சோதனையில் அஜித் வீட்டில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. போனில் பேசிய நபர் பொய்யாக மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அந்த நபர் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் மரக்காணத்தை சேர்ந்த புவனேஷ் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து மரக்காணம் போலீசார் புவனேஷை கைது செய்து நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். முன்னதாக சாலிகிராமம் மற்றும் விருகம்பாக்கத்தில் இருக்கும் விஜய்யின் வீடுகளில் வெடிகுண்டு இருப்பதாக கடந்த 6ம் தேதி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் வந்தது. சோதனையில் விஜய் வீடுகளில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் இதே புவனேஷ் தான். புவனேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர். விஜய் வீட்டிற்கு மிரட்டல் விடுத்தபோது அவரை போலீசார் எச்சரித்ததோடு விட்டுவிட்டனர். இந்நிலையில் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அவர் தொடர்ந்து இது போன்று மிரட்டல் விடுப்பதால் இம்முறை கைது செய்யப்பட்டுள்ளார்.

புவனேஷிடம் போன் கிடையாது. அவர் தன் வீட்டில் இருப்பவர்களின் செல்போனை பயன்படுத்தி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்கிறார். மீண்டும் இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு போலீசார் புவனேஷின் குடும்பத்தாரை எச்சரித்துள்ளனர். முன்னதாக புவனேஷ் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் கிரண் பேடி ஆகியோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போன் செய்திருக்கிறார். புவனேஷால் போலீசாருக்கு தலைவலியாக உள்ளது.

முன்னதாக கடந்த மாதம் ரஜினிகாந்தின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால் ரஜினியின் வீட்டிற்கு புவனேஷ் அல்ல மாறாக பள்ளி மாணவர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தல் விடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. கொரோனா வைரஸ் பிரச்சனையால் பிசியாக இருக்கும் போலீசாருக்கு இப்படி அடிக்கடி போலி வெடிகுண்டு மிரட்டில் வருவது தொல்லையாக இருக்கிறது. கொரோனா பிரச்சனையால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித், விஜய், ரஜினி உள்ளிட்டோர் வீட்டில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் அடுத்தடுத்து ஒவ்வொருவர் வீட்டிற்கும் வெடுகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனநலம் சரியில்லாத நபரிடம் செல்போனை கொடுக்கலாமா என்று புவனேஷ் குடும்பத்தாரை ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து அறிந்தவுடன் ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். பின்னர் அது போலி மிரட்டல் என்பது தெரிய வந்த பிறகே நிம்மதி அடைந்தார்கள். லாக்டவுனுக்கு முன்பு அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.