இந்தியா

இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் திறப்பு…

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. நாளை முதல் 5 நாட்களுக்கு 250 பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தொற்று பரவல் காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் எந்த வித சிறப்பு பூஜையும் நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வடசேரிகரா மற்றும் எருமேலி வழியாக மட்டுமே, சபரிமலைக்கு செல்ல முடியும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.