இந்தியாஇயற்கை

கரை ஒதுங்கிய 100 திமிங்கலங்கள் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணி தீவிரம்

இலங்கையில் நூற்றுக்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. தலைநகர் கொழும்பு அருகே உள்ள பாணந்துறை கடற்கரையில் நேற்று மாலை திடீரென 100க்கும் அதிகமான பைலட் வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. 10 முதல் 15 அடி நீளம் கொண்ட பைலட் திமிங்கலங்களை மீட்டு மீண்டும் கடலுக்குள் அனுப்ப முயற்சித்து வருவதாக இலங்கை கடற்கரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் தர்ஷனி லகந்தபுரா தெரிவித்துள்ளார். அதிக சமூகப் பிணைப்பு கொண்ட இந்த வகை திமிங்கலங்கள் கடல் நீரோட்டம், வயது முதிர்வு காரணமாக கரை ஒதுங்கியிருக்கலாம் என கடல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.