மக்களின் விருப்பத்தை அறிய ஆய்வு – ரிசர்வ் வங்கி
500 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களின் பயன்பாடு, மதிப்பு விகிதத்திலும், எண்ணிக்கை விகிதத்திலும் 2018-ஆம் ஆண்டிலிருந்தே மிக அதிகமாக உயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, 2019 -2020 ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கவில்லை. தற்போது, மக்களுக்கு எந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களின் தேவை அதிகம் உள்ளது என்பது குறித்த கணக்கெடுப்பை நடத்தி, அதற்கேற்ப ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம், 2018-ஆம் ஆண்டில் 33,500 லட்சம் நோட்டுக்களாக இருந்து, 2020-ஆம் ஆண்டில் 27,000 லட்சம் நோட்டுக்களாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த ரூபாய் நோட்டுத் தேவைகளுக்கான கணக்கெடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கையாக ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் ரிசர்வ் வங்கியின் செலவைக் குறைப்பதற்காகவும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் 5000 கோடி, ரூபாய் நோட்டு அச்சடிப்பு மற்றும் அதனை நிர்வகிக்கும் முறைக்காக செலவிடப்படுவதாகவும், கொரோனா பெருந்தொற்று காரணமாக ரூபாய் பரிவர்த்தனையில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 500 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களின் பயன்பாடு, மதிப்பு விகிதத்திலும், எண்ணிக்கை விகிதத்திலும் 2018-ஆம் ஆண்டிலிருந்தே மிக அதிகமாக உயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.