இந்தியா

8 வயது சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்காக ரத்தம் கொடுத்த காவலர்..!

ரத்த தானம் கொடுப்பவர்களால் வரமுடியாத காரணத்தினால் 8 வயது சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்காக ரத்தம் கொடுத்து உதவியுள்ளார் காவலர் ஒருவர்.

நிசார்கா புயல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரையை கடந்ததால் மும்பையின் சில பகுதிகளில் சாலை சேதமடைந்தது. இதனால் போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மும்பையின் இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சானா ஃபாதிமா கான் என்ற 8 வயது சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருந்தது. அறுவை சிகிச்சை செய்வதற்கு A+ வகை ரத்தம் தேவைப்பட்டு சமூகவலைதளங்களில் பதிவுகள் போடப்பட்டிருந்தன.

ஆனால், கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாகவும் நிசார்கா புயலால் சாலைகளில் ஏற்பட்ட சேதம் காரணமாகவும் ரத்த தானம் செய்பவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனையை வந்தடைய முடியவில்லை. இதனை அடுத்து, அந்த பகுதியில் இருந்த காவலர் ஆகாஷ் கெய்க்வாட் என்பவர் குழந்தைக்கு ரத்தம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

இதனை அறிந்த மும்பை காவல்துறை உயர் அதிகாரி இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “8 வயது சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்காக A+ வகை ரத்தத்தை தானம் செய்து உதவியுள்ளார். இவரது அர்ப்பணிப்பும் A+” என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.