இந்தியாகதைகள்

வேகமெடுக்கும் ஆன்மீக அரசியலுக்கான பணிகள்.. நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனையில் ரஜினிகாந்த் ..!!!

சென்னை : ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், மீண்டும் தனது நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நீண்ட யோசனைகள், தடைகளுக்கு பிறகு, வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கான தேதி டிச.,31ம் தேதி வெளியிடப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் நடிகர் ரஜினிகாந்த் நியமித்தார்.

முன்னதாக, கட்சி தொடங்குவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ரஜினி ஆலோசனை நடத்திய போது, மாவட்ட வாரியாக பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு விட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கையை நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தொடங்க உத்தரவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, 47,250 பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை நிறுத்தி வைக்கும்படி ரஜினி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.