அறிவியல்இந்தியா

வீட்டு வாசலில் கோலம் போடுவதன் அறிவியல் காரணம்

விடியற்காலை சூரிய உதயம் முன்பாகவே வீட்டு வாசலில், மாட்டுச்சாணம் தெளித்து, கோலமாவுடன் அரிசிமாவு கலந்து, கோலமிடுவதே வழக்கம். இது நமது பண்பாடாக கருதபட்டாலும், இதன் பின்னால் அறிவியல் பூர்வ விளக்கமும் இருக்கிறது என்பது உண்மையே.

கோலம் போடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் :

  • குனிந்து கோலம் போடும் போது, இடுப்பு எலும்பு உறுதி படும்.
  • மேலும் கோலம் போடும் போது நமது சிந்தனை ஒருமுகப்படுத்தபடும்.
  • கண்ணுக்கு அழகான கோலம் நல்ல அதிர்வலைகளைத் தூண்டி, எண்ணங்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
  • சிக்கு கோலம், நேர்புள்ளி கோலம், இடைப்புள்ளி கோலம் என வெவ்வேறாக கோலங்கள் போடுவதன் மூலம் மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சி அளிப்பதுடன், மன அமைதியையும் கொடுக்கும்.
  • கண் பார்வை தெளிவாகும்.

மேலும் அரிசி மாவில் போடப்படும் கோலங்களுக்கு இரண்டு  வகையான நன்மைகள் உண்டு –

  • பூச்சிகளுக்கும் பறவைகளுக்கு உணவாக அது அமைகிறது.
  • மேலும், வாசலிலேயே தேவையான உணவு கிடைத்துவிடுவதால் பூச்சி பொட்டுக்கள் வீட்டினுள் நுழையாது.

நம் முன்னோர்களின் ஒவ்வொரு வழக்கமும், அறிவியல் பிண்ணணி கொண்டே அமைந்து இருக்கிறது.

இவையெல்லாம் மறந்து, நாம் வீட்டில் கோல ஸ்டிக்கர் வாங்கி அழகுபடுத்திக் கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.