இந்தியாகதைகள்

விவசாயிகளை சமாதானப்படுத்த மீண்டும் முயற்சி செய்யும் மோடி..புதிய சந்தைகள்…அதிக நன்மைகள் என விளக்கம்..

வேளாண் சட்ட சீர்திருத்தங்களுக்குப் பிறகு, விவசாயிகளுக்கு புதிய சந்தைகள், விருப்பத் தேர்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தின் அதிக நன்மை கிடைக்கும் என பிரதமர் மோடி பேசினார்.

இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.ஐ) 93வது ஆண்டு பொதுக் கூட்டம் மற்றும் வருடாந்திர மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டு துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

கடந்த 6 ஆண்டுகளில் உலகம் இந்தியா மீது வைத்திருந்த நம்பிக்கையானது, கடந்த சில மாதங்களில் மேலும் வலுப்பெற்றிருகிறது. அது அந்நிய நேரடி முதலீடாக இருந்தாலும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களாக இருந்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடுகளைச் செய்து சாதனை படைத்துள்ளனர். தொடர்ந்து முதலீடு செய்கின்றனர்.

கடந்த கால கொள்கைகள், பல துறைகளில் திறமையின்மையை ஊக்குவித்தன, புதிய சோதனைகளை நிறுத்தின. சுயசார்பு இந்தியா திட்டம், ஒவ்வொரு துறையிலும் செயல்திறனை ஊக்குவிக்கிறது. நீண்ட கால போட்டித்தன்மையில் சாதகமான துறைகளில் தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

வேளாண் உள்கட்டமைப்பு, உணவு பதப்படுத்துதல், சேமிப்பு அல்லது குளிர்பதன கிடங்கு என விவசாயத் துறைக்கும் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற துறைகளுக்கும் இடையில் உள்ள தடுப்பு சுவர்களை கண்டோம். அனைத்து சுவர்களும் தடைகளும் இப்போது அகற்றப்பட்டுள்ளன.

விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கூடுதல் சந்தை வசதிளை பெற வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தங்களுக்குப் பிறகு, விவசாயிகளுக்கு புதிய சந்தைகள், விருப்பத் தேர்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தின் அதிக நன்மை கிடைக்கும், என்று மோடி கூறினார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அவர்களை சமாதானம் செய்யும் வகையில், பிரதமர் மோடி ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வேளாண் சட்ட சீர்திருத்தங்களால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பேசி வருகிறார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.