இந்தியா

விவசாயிகளின் கஷ்டம் தமிழக முதல்வருக்கு தெரியவில்லை – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி…

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு பிறகு முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு கார்ப்ரேட் முதலாளிகளுக்கு ஆதரவான சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது.விவசாயிகளின் சந்தை,மண்டிகளை ஒழிக்கும் சட்டங்கள் இவை. மாநில அரசுகள் விவசாயிகளுக்கு தரும் மானியங்கள் தடுத்து நிறுத்தப்படும்.

புதுச்சேரியில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் இணைந்து வரும் 28-ஆம் தேதி புதுச்சேரி,உழவர்கரை,பாகூர்,காரைக்கால் என பல்வேறு மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.விவசாய சட்டங்களுக்கு தமிழக முதல்வர் ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து கேட்டதற்கு, மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களை ஆதரிக்கும் தமிழக முதல்வருக்கு விவசாயிகளின் கஷ்டம் தெரியவில்லை.கார்ப்ரேட் முதலாளிகளின் கள்ள மார்க்கெட்டிற்கு தமிழக முதல்வர் ஆதரிக்கிறாரா?பதில் சொல்லட்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.