இந்தியா

வியக்கவைக்கும் வீடியோ..! பயமில்லாமல் உயிருள்ள நாகத்தின் வாலைப் பிடித்து இழுத்துச் செல்லும் மூதாட்டி…!

மூதாட்டி ஒருவர் சற்றும் பயப்படாமல் நாகத்தின் வாலைப் பிடித்து இழுத்துச்சென்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
சுஷாந்தா நந்தா என்ற இந்திய வனத்துறை அதிகாரி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது விலங்குகள் தொடர்பான வீடியோக்களை பதிவேற்றம் செய்வார். அந்த வகையில், தற்போது மூதாட்டி ஒருவர் மிகவும் துணிச்சலுடன் உயிருள்ள பாம்பு ஒன்றை அதன் வாலைப் பிடித்து இழுத்துச்செல்லும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.

இதுவரை 61 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அந்த வீடியோவைப் பார்த்துள்ள நிலையில், பலர் அந்த மூதாட்டியை பாராட்டிவருகின்றனர். சிலரோ, இது குறும்படத்திற்காக எதுவும் வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என பதிவிட்டுவருகின்றனர்.
இன்னும் சிலரோ, இதுபோன்ற சம்பவங்கள் குஜராத் பகுதிகளில் அடிக்கடி நடைபெறும் என பதிவிட்டுள்ளனர். பாம்பைப் பார்த்து பெரும்பாலானோர் பயப்படும் நிலையில் மூதாட்டி ஒருவர் அதனைப் பார்த்து பயப்படாமல் இருப்பது மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பை அடிக்காமல், சித்திரவதை செய்யாமல் அதனை உயிருடன் காட்டிற்குள் மூதாட்டி விட்டுச்சென்றது அனைவருக்கும் தகுந்த பாடம் எனவும் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.