இந்தியாஉணவுகள்தகவல்கள்

வாழை விவசாயிகளுக்கு உதவி செய்யும் ஆனந்த் மஹிந்திரா…குவியும் பாராட்டுக்கள்…

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, வாழை விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் தனது தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு வாழை இலையில் உணவு அளித்த செயல் ட்விட்டரில் அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஓய்வு பெற்ற பத்திரிகையாளர், பத்மா ராம்நாத் எனக்கு ஒரு மெயில் அனுப்பினார். அதில் எனது கேன்டீனில் உள்ள தொழிலாளர்கள் உணவருந்தும் தட்டுகளுக்கு பதிலாக வாழை இலை பயன்படுத்தினால் வாழை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

அவர் யோசனையின் படி,தனது தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழை இலையில் உணவு வழங்கபடுவதாக, ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதற்கான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். பலரும் ஆனந்த் மஹிந்திராவின் இந்த செயலுக்கு ட்விட்டரில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சரிபார்க்கவும்
Close
Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.