அறிவியல்உலகம்

‘லாக் டவுனில்’ இருந்து தப்பித்து விண்வெளிக்கு பறந்து சென்ற இருநாட்டு வீரர்கள்’…!

உலகமே கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் சூழலிலும், சர்வதேச விண்வெளி ஆய்வு மைய ஆராய்ச்சிக்காக 3 பேர் கொண்ட குழுவை நாசா ராக்கெட் மூலம் வெற்றிக்கரமாக விண்வெளிக்கு அனுப்பியது.

கொரோனா வைரஸ் அமெரிக்காவையே புரட்டிபோட்டு வரும் இந்த சூழ்நிலையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் விண்வெளி வீரர் கிறிஸ்  கேசிடி ,ரஷ்ய விண்வெளி ஆய்வாளர்கள் அனடோலி  இவனிஷின்  மற்றும் இவன்  வாக்னெர்   உள்ளிட்ட வீரர்களை கஜகஸ்தானில் உள்ள பைகனூர் விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கபட்டனர். இந்த வீடியோ காட்சியை நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் பதவிவேற்றியுள்ளது.

கொரோனா பாதிப்பு இரு நாடுகளிலும் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக விண்வெளி வீரர்கள் கடும் கட்டுபாடுகளுடன் தங்களை தாங்களாகவே தனிமைப்படுதிக் கொண்டனர். இவர்கள் தற்போது வரை நல்ல உடற்தகுதியோடு இருந்ததையடுத்து விண்வெளிக்கு பயணமாயினர் என நாசா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியுள்ள ரஷ்ய, அமெரிக்க விண்வெளி வீரர்கள் மூன்று பேர் அங்கிருந்து புறப்பட்டு பூமிக்கு வரும் ஏப்ரல் 17-ம் தேதி திரும்புகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.