சினிமா

மீரா மிதுன் மீது 5 பிரிவுகளில் சென்னை காவல்துறை வழக்குப் பதிவு!!!

சர்ச்சைக்கு பெயர் போன நடிகையும் மாடலுமான மீரா மிதுன். இவர் சமீப காலங்களாக சமூக வலைதளங்களில் மீது தனிநபர் தாக்குதல்கள் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.அதன் உச்சபட்சமாக நடிகர் விஜய், விஜயின் மனைவி சங்கீதா, நடிகர் சூர்யா, சூர்யாவின் மனைவி ஜோதிகா இவர்களைப் பற்றி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அவதூறாக பேசி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் நடிகர் விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் புகார் கொடுத்து வந்தனர். இதே போல, நடிகை சனம் ஷெட்டி, நடிகை ஷாலு ஷம்முவும் தங்கள் மீது மீரா மிதுன் அவதூறு பரப்பி வருவதாக சென்னை காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் மிஸ் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளரும், ராஸ் மிடாஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் எம்.கே.பி நகர் காவல் நிலையத்திலும், சென்னை காவல் ஆணையரகத்திலும் நடிகை மீரா மீதுன் சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசி வருவதாகவும், தனக்கு கொலை மிரட்டலும் கொடுத்து வருவதாகவும் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் ஜோ மைக்கல் பிரவீன், மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். நீதிமன்ற ஆணைப்படி நேற்றிரவு எம்.கே.பி நகர் காவல் துறையினர் நடிகை மீரா மிதுன் மீது பொது இடத்தில் பிறருக்கு தொல்லை தரும் வகையில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல சமூக வலைத்தளங்கள் மூலம் தனிநபர் தாக்குதல் நடத்தியதாக மீராமிதுன் மீது நேற்று முன்தினம் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் கடந்த 2019 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எழும்பூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது செய்த வழக்கு பதிவு தற்போதும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.