சினிமா

மீரா மிதுன் மீது போலீசில் புகார்…

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி குறித்து சமூகவலைதளத்தில் மீராமிதுன் அவதூறு பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மாடலிங் உலகில் இருந்து 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலமாக நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்தார். பெரிய எண்ணிக்கையிலான படங்களில் நடிக்கவில்லை என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார்.

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத இவர், சினிமாவில் வாரிசு ஆதிக்கம் பற்றி தற்போது பேசத் தொடங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் விஜய், சூரியா ஆகியோரின் குடும்பத்தினர் பற்றி அவதூறாக பேசத்தொடங்கினார். இதற்காக ரசிகர்களின் எதிர்வினையையும் அவர் சம்பாதித்து வருகிறார். மீரா மிதுனை விமர்சித்து வீடியோ வெளியிடும் ரசிகர்கள் மீது போலீசில் புகாரளிக்கப்போவதாகவும் அவரின் சமீபத்திய ட்வீட்கள் தெரிவிக்கின்றன. பப்ளிசிட்டிக்காக மீரா மிதுன் இப்படி நடந்து கொள்வதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் மீராமிதுன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

புகார் மனுவில், “விஜய் பற்றி கருத்து தெரிவித்ததற்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுத்தியுள்ளனர். இதில் பட்டுக்கோட்டை நகர தலைவர் ஆதிராஜாராம் ஒன்றிய தலைவர் மதன் உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். காவல்துறையினரின் நடவடிக்கை பாயுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.