சினிமாதகவல்கள்

“மருந்துக் கடையில் மது விற்கப்படும் என்று தெரியாமல் விட்டதே ” என்றார் நடிகை ரகுல் பிரீத் சிங்…!!!

ஊரடங்கு நாட்களில் நடிகை ரகுல் பிரீத் சிங் வெளியே சென்று மது வாங்கினார் என்று செய்திகள் பரவிய நிலையில் அதற்கு அவரே விளக்கமளித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் அனைத்தும் கடந்த 4 நாட்களாக பல மாநிலங்களிலும் திறக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சமூக வலைதளங்களில் நடிகை ரகுல் பீரித் சிங் வெளியே சென்று மது வாங்கி வருவதாக வீடியோ வைரலாகி வருகிறது.

 

அந்த வீடியோவில் நடிகை ரகுல் பிரீத் சிங் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி கையில் எதையோ ஏந்திக்கொண்டு அவர் அவசரமாக தன்னுடைய காருக்கு செல்கிறார். ஆனால் அவர் மது வாங்கிச் செல்கிறார் என்று வீடியோ வைரலானதை அடுத்து ரகுல் பிரீத் சிங் பதிலளித்துள்ளார்.
அவர் அதற்கு, “மருந்துக் கடையில் மது விற்கப்படும் என்று தெரியாமல் விட்டதே ” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
நடிகை ரகுல் பிரீத் சிங் ஊரடங்கு நாட்களில் யோகா பயிற்சி செய்து வருகிறார். அதுகுறித்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.