இந்தியா

போலி விவசாயிகள் பட்டியல் – விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் மோசடி!!!

கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் மூன்று ஹெக்டர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு  விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமர் கிசான் நிதி உதவி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் வங்கி கணக்கில் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாயை அரசு வழங்கி வந்தது. இந்த நிலையில் விவசாயிகள் அல்லாதோர் பலர் போலி அடையாள அட்டைகளை கொண்டு இத்திட்டத்தில் இணைந்துள்ளதாக புகார்கள் வந்தது.

குறிப்பாக தமிழகத்தில் கடலூர்,விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.சுமார் 6 லட்சம் போலி விவசாயிகள் கிசான் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, 110 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியது.இந்த வழக்கை சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலீப் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கபட்டு விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த திட்டத்தின் பயனாளிகள் பட்டியலை வேளாண்துறையிடம் உள்ள மூன்று ஹெக்டர் நிலம் உள்ள சிறு, குறு விவசாயிகள் பட்டியலோடு ஒப்பிட்டு சரிபார்க்கும் பணி நடந்து வந்தது. அதன் மூலம் விவசாயிகள் அல்லாத யாரெல்லாம் பணம் பெற்று வந்தனர் கண்டுபிடிக்கப்பட்டு அந்த பட்டியல் சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இனி கைது நடவடிக்கை தீவிரமடையும் என தெரிவித்துள்ள சிபிசிஐடி அதிகாரிகள் இதுவரை 60 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.அதே போல, இந்த மோசடி தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் சிபிசிஐடி-யிடம் தெரிவித்தால் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், கடந்த 6 நாட்களில் மட்டும் 300 தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.