இந்தியா

பூர்ணசந்திரன் கல்லூரி கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டது ரத்து – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குனராக இருந்த சாருமதி கடந்த மே மாதம் ஓய்வு பெற்றதையடுத்து பூர்ணசந்திரன் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி கல்லூரி கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டார். பணிமூப்பில் உள்ள தன்னை நியமிக்காமல் கல்லூரிக் கல்வி இயக்குநராக பூர்ணசந்திரனை நியமித்தை எதிர்த்து திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி முதல்வர் கீதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் இருந்தே நியமனம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே அவர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும் அவர் நியமனம் தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன் நேற்று பூர்ணசந்திரன் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். உரிய விதி முறைகளைப் பின்பற்றிதான் கல்லூரி கல்வி இயக்குனர் பதவி நிரப்ப வேண்டும் என்றும் சில வழிகாட்டு நெறிமுறைகளையும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.