தகவல்கள்

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதலமைச்சர் …

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

திமுகவின் சென்னை மேற்கு மண்டலச் செயலாளராகவும், தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் ஜெ.அன்பழகன். 61 வயதான இவர் தியாகராயநகரில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக கடந்த 2ம் தேதியன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். கவலைக்கிடமாக இருந்த ஜெ.அன்பழகன் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். தனியார் மருத்துவமனை மருத்துவர் ரீலாவிடம் தொலைபேசியில் கேட்டறிந்த போது, அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.