சினிமா

சூர்யாவுடன் சேர்ந்து விரைவில் ஒரு படத்தில் வேலை செய்வேன் என்று இயக்குநர் பாண்டியராஜ் கூறியுள்ளார்.

குடும்பங்கள் கொண்டாடும் படத்தை எடுப்பதில் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் தான் பாண்டிராஜ். கடைசியாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நம்ம வீட்டுப் பிள்ளை படத்தை எடுத்திருந்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்து வசூலை வாரிக் குவித்தது.
இயக்குநர் பாண்டிராஜ் இப்போது தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் ஜோதிகா நடிப்பில் உருவாகி நாளை அமேசானில் வெளியாக உள்ள பொன்மகள் வந்தாள் படம் குறித்து பேசி உள்ளார். அதில் “பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்தேன். ஜோதிகா அருமையாக நடித்திருக்கிறார். 5 உட்ச நட்சத்திரங்களை திரையில் ஒன்றாக பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் சூர்யா படத்தை இயக்குவீர்களா? என்று டிவிட்டரில் கேள்வி எழுப்பினர். அதற்கு இயக்குநர் பாண்டிராஜ் ‘விரைவில்’ என்று பதிலளித்துள்ளார். பாண்டிராஜின் இந்த பதிவு சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

ஏற்கனவே இயக்குநர் பாண்டிராஜ் நடிகர் சூர்யாவுக்காக கதை ஒன்றை எழுதியிருப்பதாக கூறியிருந்தார். அதே நேரத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியால் அந்தப் படத்தை தயாரித்திருந்த சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி எண்டர்டெயின்மெண்ட் மீண்டும் பாண்டியராஜனுடம் ஒரு படத்திற்கு அப்போதே ஒப்பந்தந்தம் செய்திருந்தது. இதனால் சூர்யா படத்தை இயக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருப்போம்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.