தமிழ்நாடு

தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு மீண்டும் பணிநீட்டிப்பு…

1985-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்.அதிகாரியான சண்முகம், கடந்தாண்டு தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார். இதனைதொடர்ந்து ஜுலை 31-ஆம் தேதியுடன் அவர் ஓய்வுபெறுவதாக இருந்த நிலையில், கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததால் அவருக்கு மூன்று மாதம் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது.

அதன்படி அக்டோபர் மாதத்துடன் உடன் அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு மேலும் 3 மாதங்கள் பணிநீட்டிப்பு வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.இதனை மத்திய அரசு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.