சினிமா

“சுஷாந்துக்கு” ஆதரவாக திரைத்துறையில் யாரும் உதவவில்லை- கிளப்பும் குற்றச்சாட்டு!

சுஷாந்துக்கு ஆதரவாக திரைத்துறையில் யாரும் நிற்கவில்லை என பிரபல சிகை அலங்கார நிபுணர் சப்னா பவானி தெரிவித்துள்ளார்.

34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 6 மாதங்களாகத் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து ட்வீட் செய்துள்ள பிரபல சிகை அலங்கார நிபுணர் சப்னா பவானி, கடந்த சில ஆண்டுகளாக சுஷாந்த் மிகவும் கடினமான சூழலில் தான் இருந்தார் என அனைவருக்கும் தெரியும். அது ரகசியமல்ல. தொழில்துறையில் யாரும் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை, அவர்கள் உதவி கரம் கொடுக்கவில்லை. இன்றைய ட்வீட்கள் இந்த துறை எவ்வளவு மேம்போக்கானது என்பதற்கு சாட்சி. இங்கே யாரும் உங்கள் நண்பர் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.