இந்தியாதகவல்கள்தொழில்நுட்பம்

கொரோனா நோயாளியின் ப்ளாஸ்மா தானம்… கைகொடுக்குமா சிகிச்சை ?

தமிழகத்தில் முதல்முறையாக செய்யப்பட்ட பிளாஸ்மா தானம் செய்யப்பட்டு கொரோனாவிற்கான புதிய சிகிச்சை முறை தொடங்கியுள்ளது. பிளாஸ்மா சிகிச்சை முறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த ஒரு நோயாளியிடம் இருந்து ரத்தத்தை எடுத்து மற்றொரு கொரோனா தொற்று நோயாளிக்கு கொடுக்கப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடம்பில் செலுத்தப்படும் ரத்த அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸை அழிக்கின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்த முடிகிறது. தமிழகத்தில் இந்த பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை முயற்சிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அண்மையில் அனுமதி வழங்கியது.

இந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக சென்னையை சேர்ந்த ஒருவர் பிளாஸ்மா தானம் செய்துள்ளார் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவிலிருந்து குணமடைந்த ஒருவரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டுள்ளது. இவருடைய பிளாஸ்மா தானம் மூலம் கொரோனா பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.