இந்தியாதொழில்நுட்பம்

கொரோனாவைக் கொல்லும் ‘புறஊதாக்கதிர்’…பல கண்டுபிடுப்புகளை செய்து அசத்தும் இந்திய மாணவர்கள்!!

புற ஊதாக்கதிர்கள் என்றாலே ஓசோன் படலத்தை பாதிக்கும் தீய கதிர்கள் என்ற எண்ணமே மக்கள் மத்தியில் இப்போது வரையிலும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், இதற்கு, கிருமிகளை அழிக்கும் பண்பு உள்ளது. புற ஊதாக் கதிர்கள், 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஏ மற்றும் பி ஆகிய இரண்டும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு தீங்கானவைதான். ஆனால் ‘சி’ பிரிவு புற ஊதாக் கதிர்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை மனிதர்கள் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் மற்றும் செல்போன்கள், கம்ப்யூட்டர் கீபோர்டுகள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றின் மேல்புறத்தில் இருக்கும் புறக்கிருமிகளை அழிக்கப் பயன்படுகிறது.

கொரோனா வைரஸைக் கொல்லக் கூடிய புறஊதாக் கதிர் டார்ச் லைட்டுகளை மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

மஹாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த மாணவர்களான அனிகெட் மற்றும் பூணம் ஆகியோர் இக்கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தக்கருவி பார்ப்பதற்கு டார்ச் லைட் போல இருக்கும். இதிலிருந்து வெளிப்படும் 16-33 வாட்ஸ் திறனுள்ள ஒளியின் மூலம் வைரஸைக் கொல்ல இந்த டார்ச்சைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த டார்ச் லைட்களைத் பெருமளவு தயாரிக்கும் பொறுப்பை மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஏற்றுக்கொண்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மாணவர்களின் ஆய்வு வழிகாட்டியான ஆர்.ஜி.சொன்காவடே, “புற ஊதாக்கதிர்களால் கிருமிநீக்கம் செய்யப்பட்ட காய்கறிகள் உண்பதற்கு உகந்தவைதான் என்பது நிரூபணமாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். “நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு விட்டோம். புற ஊதாக்கதிர்கள் உணவுப் பொருட்களுக்குள் கலக்காது” என்றும் தெரிவித்தார்.

மேலும்  இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி- ரோபர்) , புற ஊதா கதிர்வீச்சுகள் மூலம் கிருமிகளை கொள்ளும் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்ட ஒரு தண்டு வடிவ சாதனத்தை உருவாக்கியுள்ளது, அவை வீட்டு வாசல்களில் வைக்க பரிந்துரைக்கின்றன மற்றும் மளிகை மற்றும் நாணயத்தாள்கள் உட்பட வெளியில் இருந்து கொண்டு வரப்படும் அனைத்து பொருட்களையும் அந்த கதிர்கள் மூலம் சுத்தம் செய்யலாம் என கூறுகின்றனர்.

குழுவினரின் கூற்றுப்படி, வணிகமயமாக்கப்படும் போது அவை 500 ரூபாய்க்கும் குறைவாகவே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . சாதனம் பொருட்களை சுத்தப்படுத்த 30 நிமிடங்கள் ஆகும், மேலும் 10 நிமிட அவை குளிரூட்டப்பட்ட பிறகு உபயோகப்படுத்த பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்திலும் மருத்துவமனைகளில் தானியங்கி புற ஊதாக்கதிர்கள் இயந்திரத்தை உபயோகிக்கும் திட்டம் செயல்ப்பட்டு வருகிறது .ஏற்கனவே சார்ஸ் போன்ற வைரஸ் பரவலை தடுக்க இந்த முறையை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.