இந்தியா

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை உளவு பார்க்கும் சீனா…

லடாக் எல்லையில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இது பல மட்டங்களிலும் எதிரொலித்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி, எல்லையில் இருந்து ராணுவ வீரர்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட 5 அம்ச திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், சீன அரசுடன் தொடர்புடைய ஷென்ஹூவா என்ற தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனம், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலரையும் உளவு பார்த்து வரும் தகவலை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு அம்பலப்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்தியாவில் இயங்கும் பல நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளையும், உளவு பார்க்கும் இந்த நிறுவனம், முன்னாள் ராணுவத் தளபதிகள் பலரையும் கண்காணித்து, அவர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வகையில் குடியரசுத் தலைவர் தொடங்கி, நிறுவனங்களில் தலைவர்கள் வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை இந்த நிறுவனம் உளவு பார்ப்பது அம்பலமாகியுள்ளது. எனவே இந்த நிறுவனம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, பிரிட்டன் ராணி குடும்பத்தையும் இந்த நிறுவனம் உளவு பார்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.