தமிழ்நாடு

கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை – நீதிமன்றம்

கல்லூரிகள் பொறியாளர்களி உருவாக்குவதில்லை, பொறியியல் பட்டதாரிகளை தான் உருவாக்கின்றன என மதுரை கிளை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார், சுயநிதி பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு  கொரோனா காலத்தில்  உரிய முறையில் ஊதியம் வழங்கப்பட்டு உள்ளதா?   என்பதை  உறுதி செய்ய வேண்டும்.  அதுவரை  தமிழ்நாட்டில்  நடப்பாண்டிற்கான பொறியியல் சேர்க்கைக்கான,  கலந்தாய்வை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிய வழக்கு மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா ஊரடங்கால் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால்,  தனியார் கல்லூரி ஆசிரியர்கள பல மாதங்களாக ஊதியம் இல்லாததால், கல்லூரி ஆசிரியர்கள் பலர் பிரியாணி கடைகளிலும்,  ஓட்டல்களிலும் பல்வேறு வேலைகளில் உள்ளனர் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழகத்தில் தேவைக்கு அதிகமான புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளன .  இதற்கு யார் காரணம்? யார் அனுமதி வழங்கியது? AICTE. தான் காரணமா? தற்போது கல்லூரிகள்    பொறியாளர்கள் உருவாக்குவதில்லை? பொறியியல்  பட்டதாரிகளை  தான் உருவாக்கின்றனர். அதனால்தான் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கல்வி வியாபாரமாகிவிட்டது. இது போன்ற பிரச்சினைகளை களைய வேண்டும்.  தேவைக்கேற்ப கல்லூரிகளை தொடங்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து  தெரிவித்தனர். இந்த வழக்கில் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகளையும்   எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்து  உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.