இந்தியா

ஏர் இந்தியா விமான விபத்தில் 14 பேர் உயிரிழப்பு…

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு 191 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா சிறப்பு விமானம் வெள்ளிக்கிழமை இரவு வந்துசேர்ந்தது. கோழிக்கோடு விமான நிலையத்தில் இரவு 7.40 மணிக்கு விமானம் தரையிறங்கும் போது, திடீரென ஓடுதளத்திலிருந்து விலகிச்சென்று விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தின் பாகங்கள் இரண்டு துண்டுகளாக உடைந்தன.

விபத்தில் சிக்கி விமானி, பயணிகள் என 14 பேர் உயிரிழந்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பலர் படுகாயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. கோழிக்கோடு விமான நிலையத்தில் மழைக்கிடையே மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் கோழிக்கோடிற்கு விரைந்துள்ளனர். கேரளாவில் கனமழை காரணமாக போதிய வெளிச்சமில்லாமல் இருந்த நிலையில், விமானம் ஓடுதளம் முழுமைக்கும் சென்று வழுக்கி விழுந்ததாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.